Tuesday, 22 July 2014

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-11

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-11

              சைவ சித்தாந்தம் வழி நின்று வினை மற்றும் அதன் பயன் ,அவை செயலாற்றும் விதம் குறித்த சிந்தனை சென்ற பகிர்வுகளில் பகிரப்பட்டது.மேலும் சில வற்றை உங்களுடன்.

                       நம் செய்த  வினையின் பயன் நம்மை கட்டாயம்வந்தடையும்.
பரந்தாமனே பக்க துணையாக இருந்த போதும் வனவாசமும்,அன்ஞாத 
வாசமும் பாண்டவர்க்கு தவிர்க்க முடியாததாக போனது.இதன் மூலம் புராணங்கள் உணர்த்துவது செய்த வினையின் பயன் அவரவரை கட்டாயம் வந்து சேரும் என்பதே.

                         பாண்டவர் தம் செய்கர்மா முடிந்த பின்னே அதே பரந்தாமன் தானே தூது சென்று சமாதானம் சாத்தியமாகாமல் அவர்களை
தர்மயுத்தம் செய்வித்து அவர்களை காத்து தர்மத்தை வெல்லசெய்தான்.
அதுவும் போர்க்களத்தில் துவண்டு நின்ற பார்த்தன்,உபதேசம் பெற்ற பின்னே "எல்லாமே நீயே கிருஷ்ணா"-  என அவன் பாதம் பணிந்து நின்ற பின்னே.
                   இந்த இதிகாசங்கள் நமக்கு உணர்த்துவது   யாது....சற்றே சிந்தித்தால் விளங்கும் நமக்கு உண்மை.நாம் செய்யும் செயல்கள் யாவிலும் உண்மையும்,நேர்மையும்,பிறர் மனம் நோகா தன்மையும்,நமது செய்கர்மங்களுக்கு நாமே பொறுப்பு எனும் அறிவும் இருந்தால் போதும்.
 அதற்கான பயன் நல்வினையாக நமை வந்து சாரும்.

        நல்லவற்றையே சிந்தித்து,நல்லவற்றையே பேசி,நற்செயல்களையே செய்தோம் ஆனால் நமை சுற்றி நல்லனவே நடக்கும்.ஒரு மனிதன் தன்னையே சார்ந்து அதிக நேரம் நல்ல எண்ணங்களை  [positive thought ] கொண்டிருக்க இயலாது ,ஏனெனில் நாம் மனித இனம்,சஞ்சலம் என்பது நமது உடன் பிறந்தது,எனவே மற்றொரு அதீத சக்தி மீது நாம் நம்பிக்கை  வைக்கின்றோம்.அதுவே நமது மொழியில் சிவம்,சக்தி ,முருகன் என இன்ன பிற தெய்வங்கள்.இந்த இறை நம்பிக்கை நம்மை பலப்படுத்தும் நமது நல்ல எண்ணங்களை செயலாக்கி தரும். அவ்வாறு தாம் செய்து தருவோம் என நமக்கு ஆறுதல் தர சில சமிக்கைகள் அவர்களிடம் இருந்து தேவைபடுகின்றன.அவற்றை நமக்கு தருவது நம் வழிபாடு.அதன் வழி சன்னதம் வந்து சொல்வதும்,நம் உள்ளத்தினின்று உணர்த்துவதும் ,நாம் செய்யும் செயல்களை தடையின்றி செலுத்தி தருவதும்,நம்தெய்வம்  நமக்கு தக்க துணை நிற்பேன் என சொல்லால் சொல்லாமல் நமக்கு உரைக்கும் செய்தி.

                            நமது தெய்வநம்பிக்கை நமக்கு கிடைத்த வரப்ரசாதம்.நமது குடும்பங்கள் ஒன்றிணைந்து வருடம் தோறும் பழனி பாதயாத்திரை எனும் ஆன்மீக பயணத்துடன் தொடங்குகிறது.இந்த பயணம் அந்த வருடம் முழுமைக்கும் நமக்கு உற்சாகம் தருகிறது.அதன் வழியில் இந்த காவடி எனும் மாபெரும் நிகழ்வு ,நமது வாழ்க்கை பயணத்திற்கு உற்சாகம் தருகிறது.ஒரு குடும்பமாய் A S PILLAI FAMILY என்ற ஆலமரத்தின் அடியில் இளைப்பாறும் நாம் ,என்றும் அவர்களது அருள் வட்டத்துள்
இருகின்றோம் என்பதை நமது பாட்டனும்,முன்னோரும்,
குலதெய்வங்களும்,பெருந்தெய்வங்களும் நமக்கு சில சமின்கைகள் மற்றும் அற்புதங்கள் மூலம் நமக்கு உணர்த்தின இக்காவடியில் அவை இதோ.

                        காவடி எடுத்து செலுத்தி இருமாதம் கடந்த பின்னே மெல்லவே அரங்கேறுகிறது அதன் சிறப்பினை பற்றிய தொகுப்பு. ஆனபோதும் அதன் உணர்வினில்,அதனை வெளிப்படுத்தும் விதத்தினில் அன்று  இருந்த அதே உணர்வு மீண்டும் சிலிர்த்து எழுகிறது.இதுதான் பேரின்பம் என்பதோ? காவடி அம்மைநகர் வீதி வலம்  வந்தது மேமாதம் 25 ஆம் தேதி.அதன் முன்னே குலதெய்வம் வழிபாடு செய்ய நாங்கள் புறப்பட்டது 

                  23 ஆம் தேதி.அம்மைநகர் இருந்து புறப்பட்ட வாகனம் நாகமலை வந்தது.அங்கு அன்பு தம்பி ப்ரசன்னா ஆயிரம் மையில்களுக்கு அப்பால் இருந்து கடல் கடந்து பறந்து வந்து கண்களில் பயணக்களைப்பு இருந்தபோதும்,அன்பு சொந்தங்களை,அவனை வளர்த்த பந்தங்களை காண ஆவல் கொண்டு,அடுத்த தலைமுறை வாரிசாக ஆன்மீக பயணத்தில் காவடி என்னும் அற்புத நிகழ்வில் பங்குபெற,தாய்நாடு வந்த சூட்டோடு தன் குலம் காக்கும்  கருப்பனை வழிபட  எங்களுடன் இணைந்து கொண்டது.எங்களை சுமந்து கொண்ட வாகனம் சிவகங்கை சீமை நோக்கி சென்றது.

                  முதல் பயணமாய் அபினவ் கார்த்தியை இவ்வுலகம் காண அருள் புரிந்த அவர்களின் குலதெய்வம் வீற்றிருக்கும் சக்குடி நோக்கி சென்றோம். சிவகங்கை சீமை வானம் பார்த்த பூமி,வறண்ட மணற்பரப்பும்,நிறைந்த சீமை கருவையும்,ஆங்காங்கே தண்ணீரும் அதனால் வளர்ந்த சில மரங்களுமாய் காட்சி தரும்.அன்று நாங்கள் சென்ற சக்குடியும் அதன் ஒரு பகுதிதான்.இங்கு கொலுவீற்றிருக்கும் நளினமான குணம் கொண்ட எங்கள் அத்தை வணங்கும் தெய்வமது மூன்று இடத்தில் அதே ஊரில் சில தூரம் இடைவெளியில் அமைந்திருந்தது.

                  முதலில் நாங்கள் அந்த கிராமத்தின் உள்ளே தெருக்களின் மத்தியில்  அமைந்திருந்த சாந்தாயி அம்மன் என்ற பெண் தெய்வம்.கருணை ததும்பும் வடிவுடன் கிராமத்து மணம்  மாறாமல் அமைந்த திருக்கோவில். அடுத்து சென்றது வயல் சூழ்ந்த இடத்தில் வரப்புகளின் நடுவே சிறு கட்டிடத்தில் குடி கொண்ட,தீப்பாய்ந்த அம்மன் என்ற பெயர் கொண்ட பாக்கியத்து அம்மன்.அந்த கோவில் முதலில் பீடமாய் இருந்து பின்னர் சிலை அமைத்து உள்ளனர்.வரும் தீமை யாதகினும் அதை  தன்  சுட்டு விழியால் மாய்த்து தன பக்தர்க்கு தக்க துணை செய்திடுவேன் என சூளுரைத்தது இந்த அம்மன்.அங்கிருந்து சற்று தொலைவில் பிலாவடி கருப்பு கோவில்.

                   பில்லத்தி  கருப்பு கோவில் ,இது எங்களுக்கு ஏற்படுத்தவிருந்த பிரமிப்பு அறியாமல் உட்புகுந்தோம்.இந்த அற்புத கோவில் அமைந்திருப்பது ஊருக்கு சற்றே வெளிப்புறத்தில் உயர்ந்த கண்மாய் கரையில்.கோவிலின் முகப்பு கண்மாயை நோக்கி இருக்க,பாதை நோக்கி இருப்பது பின்புற வாசல்.அதனை சுற்றிக்கொண்டு கண்மாய் கரையில் அமர்ந்து ஆட்சி புரியும் பில்லத்தி  கருப்பனை வழிபட கோவில் உட்புகுந்தோம். முதலில் வாசலுக்கு நேரே  இருக்கும் சன்னதி பில்லத்தி  கருப்பன்.ஆனால் அங்கே கருப்பன் நமக்கு நேரெதிர் கட்சி தராமல் இடப்புறம் சன்னதியில் வீற்றிருக்க அவரது தங்கையாம் ராக்காயி அம்மன்  அவருக்கு எதிர்புறம் நமக்கு வலப்புறம் அமர்ந்து அருள் புரிந்தார்.இங்கு உள்ள கருப்பன் அவ்வளவு சக்தி மிக்கவன் நேரெதிர் தரிசிக்க இயலா உக்கிரம் கொண்டவன்.அதனாலே இந்த சன்னதிகளின் அமைப்பு இவ்வாறு உள்ளது. இடப்புறமும்,வலப்புறமும் இவர்கள் வீற்றிருக்க,கோவில் வாசலின் நேரே இருப்பது சன்னதி வாசல்,அதன் நேரே மற்றொரு வாசல் உட்புறம் நோக்கி இருக்க,அதன் வழியாய் நமக்கு காட்சி தந்தவர் ஐயனும்,சாஸ்தாவும்.

                           பில்லத்தி  கருப்பன் சன்னதிக்கு புறம் சென்று வலம்  வந்தால் ஐயனை காணலாம், அங்கே அருமையான தேஜசுடன் ஐயனும் அவருடன் பூர்ணகலா தேவி,சந்திரகலா தேவிஅருள்பாலித்தனர்.அவர்களுடனே அங்கே சாஸ்தாவும் அமர்ந்து தன அருள் நோக்கை தருகின்றார்.

                              அங்கே பரிவார தெய்வங்களாக வீற்றிருந்தார் எங்கள் முத்தையா.அழகிய குதிரை மீது அழகனாய்  ஆக்ரோசமாய் எங்கள் முத்தையன்.நின்ற திருமேனியாய் கோச்சடையில் கண்டுள்ளோம்,
அருஉருவமாய் குறுச்சியில் கொண்டுள்ளோம் ஆனால் வெட்டருவாள் தாங்கி குதிரைமீது பாய்ந்துவரும் கோச்சடையானாய் மாவடி கருப்பனாய்  பில்லத்தி  கருப்பன் கோவிலில் கண்டு சிலிர்த்தோம்.

                      இன்னும் இக்கோவில் இருக்கும் பரிவார தெய்வங்கள் ஒவ்வரு கிராமத்திலும் உள்ள காக்கும் தெய்வங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து கூடியிருந்தார் போல் இருந்தது.
     
                    அங்கே இருந்த ஒரு மரம் மற்றுமொரு அதிசயம்.திருகுவாச்சி என்ற பெயர்கொண்ட இந்த கோவிலின் தலமரம்.அதில் மணியை கட்டி இருந்தனர் அதனை மூடி  மறைத்து மரம் வளர்கிறது.பிரார்த்தனை மணி உள்ளே செல்லும் போது  அவர்கள் பிரார்த்தனை நிறைவேறும் நம்பிக்கை. 
              
                  இப்படி அதிசம் அநேகம் நிறைந்த அத்தனை தெய்வங்களும் கூடி அருள் பாலிக்கும் பில்லத்தி கருப்பனை வழிபட்டு இந்த காவடி முருகன் திருவடி அடைய அருள் புரிய வேண்டி வணங்கி புறப்பட்டோம் குறிச்சியை  நோக்கி.






No comments:

Post a Comment