Showing posts with label காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-9. Show all posts
Showing posts with label காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-9. Show all posts

Thursday, 3 July 2014

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-9

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-9

               ஒவ்வொரு பதிவும் எழுத ஆரம்பிக்கும் பொழுதும் எனக்கு தோன்றும். குறி சொல்லும் குறத்திகள் தங்கள் தெய்வமாகிய முருகப் பெருமானையும், தாய் ஜெக்கம்மாவைவும் துணை கொண்டு வணங்கி தன் வாக்கில் அவர்கள் வந்து குடியேறி நல்ல சொல்லை சொல்லி அருள் புரிய வேண்டுவார்கள்.அது போல நானும் எழுதும் எழுத்துக்கள் சரியானதாக அமைய என் அம்மையப்பனை மனதில் நினைத்தே சொல்லில் வடிக்கின்றேன்.

             சென்ற பதிவில் விணை  மற்றும் வினை பயனை பற்றி சில வற்றை பகிர்ந்தேன்,
மேலும் சில விவரங்கள் சைவ சித்தாந்தத்தில் இருந்து.
நாம் செய்யும் செயல்கள்,மனதில் நினைப்பது,சொல்லாய் உதிர்ப்பது இவையே விணையாக ,கர்மாவாக மாறுகிறது.இதனை மூன்று நிலைகளில் வகைப்படுத்துகிறது  சித்தாந்தம்.
1.ஆகாமியம்,2.சஞ்சிதம்,3.ப்ராப்தம்.

ஆகாமியம் ;
இது நாம் அன்றாடம் செய்யும் விணை -நல்விணை ,தீவிணை  இரண்டுமே.இதன் அடிப்படையில் தான் நம் விதி அமைகிறது.

சஞ்சிதம்;
நாம் செய்த விணையானது ,செய்து முடித்த உடன்...தொல்வினையாக மாறி சூட்சமமாய் சஞ்சரித்து கொண்டே இருக்கும்.இந்த சஞ்சாரம் காலம் எதுவரை என்றால் அதனை நாம் அனுபவிக்கும் வரை.இது நொடி பொழுதில் தொடங்கி .....ஜென்மங்கள் வரையும் தொடரும்.

ப்ராப்தம்;
இது சூட்சமமான சஞ்சித விணை  பயனாய் வருவது. இங்கு தான் நமது நல்விணை -புண்ணியமாய் மாறி இன்பத்தையும், தீய வினை பாவமாய் மாறி துன்பத்தையும் தருகிறது.

              துன்பம் தரும் தீவினையின் பயனை குறைக்க வழி வேண்டுமே ?அது தான் வழிபாடு. நம்முடைய இஷ்ட தெய்வத்தை மனதார நினைத்து ,நம்பிக்கையுடன் வழிபாடு செய்வதே பக்தி.

           சிறுபிள்ளையாக கைகூப்ப தெரிந்து ,சொற்கள் மழலையாக வரும் போது கைகூப்பி கடவுள் முன் நிற்கும் குழந்தைக்கு, நம் பெரியவர்கள் "எனக்கு நல்ல புத்தியை கொடு ,நல்ல படிப்பை கொடு " என்று தான் சொல்லி சொல்லித்தருகிறார்கள்.இதே வேண்டுதலை எப்போதும் தொடர்ந்தால் இன்னல்கள் ஏன் வருகிறது.

                        கூட்டு பிரார்த்தனைக்கு வலிமை அதிகம், நமக்காக வேண்டாமல் அடுத்தவர் நலனுக்கு வேண்டும் போது அதன் வலிமை இன்னும் அதிகரிக்கும்.ஒரு பொழுது செய்யும் பிரார்த்தனைக்கே இவ்வளவு வலிமை எனில்....கங்கணம் எனும் மங்கள நாண் கட்டி இருபத்துஒரு நாட்கள் சிந்தை முழுதும் மங்களம் நிரப்பி,அனைவர் குடிகளும் சிறக்க,
குறைகள் களைய கந்தனிடம் வேண்டிய அந்த பிரார்த்தனை எத்தனை சிறப்புற்றது.

           இந்த காவடி திருவிழா சிறப்பாக நடந்தேறும் என்று அன்றே சூளுரைக்கப்பட்டது. ஆறுபேருக்கு கங்கணம் கட்டிய பின் அடுத்தது...எங்கள் குல தெய்வமதை  சுமந்து நின்றாடும் பெரியத்தானுக்கு.அன்று கட்டப்பட்ட அந்த கங்கணம் எங்கள் பெரிய மாமாவின் மகனுக்கு அல்லமாவடியானுக்கு.என்றும் வழி நடத்தும்  மருதமரத்து அரசன் அன்று உடன் வந்து காவடியை முருகன் சேவடியில் சமர்பிக்க உற்ற துணை இருப்பதற்கு சத்திய வாக்கு தந்தான்.

          அம்மை நகரில்,நம் குடும்பம் காணும் நான்காவது காவடி திருவிழா இது.சிலவற்றை சிலர் தான் வழிநடத்த விதித்திருப்பான் வேலவன்.அது போல் காவடியை கட்டுமிடம் என்றெ  என்றும் முருகன் இல்லம் தான்.தலைமுறைகள் கடந்தாலும் அதன் வாரிசுகள் வசம் தான் ஒப்புவித்தான் அந்த புண்ணிய பொறுப்பை.தீர்க்க தர்சி நம் பாட்டன் ,அதில் ஐயம் இல்லை,அதனால் தான் தம் வம்சத்தில் இருவருக்கு குல தெய்வம் பெயரிட்டார்கள்
.காவடி பொறுப்பையும்  கருப்பையாக்களின் தலைமையில் அமைத்தார்கள்.

உருவானது காவடி-மூத்த கருப்பு வெளியிட்டகாவடி எடுப்பித்தல் என்ற  விருப்ப படி.

செயலானது காவடி-இளைய கருப்பு அதில் காட்டிய ஸ்ரத்தையினால்.
அம்மைநகரில்  அவர்களை மீண்டும் அமர்த்தி ஆன்மிகம் நம்வீட்டில் தழைக்க வைத்தது முருகன் அருள்.

                இந்த இளைய கருப்பையா விற்கு கட்டப்பட்டது கங்கணம்.ஒருவர்க்கு கட்டினால் அது நால்வர்க்கு கட்டியதாய்  ஆகுமோ?ஆகும். சித்தப்பா கட்டி கொண்டது இரண்டு கங்கணங்கள். 

                     தனக்கு ஒன்று,பிரசன்னாவிற்கு ஒன்று என. ஆனால் கட்டும் போது -
கட்டியது இராமநாதபிள்ளை [முத்துகுமார் தாத்தா வடிவில்]கட்டப்பட்டது-சுப்பையா  பிள்ளைக்கு.
            
            பிரசன்னாவிற்கு கட்டியது ஒன்று-அது தம்பிக்கு மட்டுமா இல்லை அவன் வடிவில் நின்ற பார்த்திபனூர் கருப்பனுக்கு.தம் பிள்ளைகளை எல்லாம் வழி நடத்தி காவடியை நல்முறையில் செலுத்த வேண்டிகொண்டனர் எங்கள் அத்தைமார்.

                       அன்றே சத்தியம் செய்தார்கள் நம் பாட்டன் பிரச்சனைகள் ஒவ்வன்றாய் சரி செய்யப்படும் என்று- அதன் படி கங்கணம் கட்டிய 12 ஆம் நாள் நல்ல முடிவை எட்டியது ஒரு பிரச்சனை.

திக்கற்றவர்க்கு தெய்வமே துணை ! அந்த துணை என்றும் கைவிடாது!

மீண்டும் அடுத்த பதிவில்.