Wednesday, 9 July 2014

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-10

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-10

நம் முன்னோர்கள்,குலதெய்வங்களை வணங்கி அவர்கள் துணை கொண்டு முருகப்பெருமான் பாதங்களை பற்றுவோம்.

சென்ற இருபதிவிலும் சைவ சித்தாந்தம் வழி நின்று விணை    மற்றும் விணைப்பயனை பற்றி பார்த்தோம் மேலும் சில சிந்தனைகள் .

விணை  மூன்று வகையாய் நின்று  புரியும் என பார்த்தோம்.
1.ஆகாமியம்,2.சங்சிதம் மற்றும் 3. ப்ராப்தம்.

 இன்று இதில் மூன்றாம் வகை ப்ரப்தம் பற்றிய மேலும் சில விவரங்கள்.

ப்ராப்தம்-நாம் செய்த விணை யினை  அனுபவிக்கும் பகுதி.இதில் நல்லதும் கெட்டதும்  அடக்கம்.இந்த ப்ராப்தம் மூன்று வகையில் நம்மை வந்து அடையும்.அவை...

1.ஆதி ஆன்மிகம்,ஆதி பௌதீகம்,ஆதி தைவீகம்.

ஆதி ஆன்மிகம்-
நாம் செய்த விணை யின் பயன் பிற உயிர்கள் மூலம் நமை வந்து அடைவது. பிற உயிகள் என்பது ஓர் அறிவு முதல் ஆறு அறிவு பிராணியான மனிதன் வரை எத்தன மூலமாகவும் வந்து நம்மை அடையும் .இதிலும் துன்பம்,இன்பம் இரண்டும் உண்டு.

ஆதி பௌதீகம்
நாம் செய்த விணையின் பயன் ஜடப்பொருள் மூலம் வந்து அடையும்.ஜடப்பொருள் என்பது இந்த உலகினையும் ,அதில் உள்ள உயிரற்ற பொருட்களையும் சாரும்.
ஒரு ஜடப்பொருளை நாம் அடையும் போது மகிழ்ச்சியும்,அது கிடைக்காவிடின் அல்லது தொலைந்த பின் வரும் துன்பமும் இதில் அடங்கும்.

ஆதி தைவீகம் 
இது முற்றிலும் இறைவனால் நமக்கு அளிக்கப்படுவது.பிறப்பு,இறப்பு இந்த இரண்டும் இறைவனால் நமக்கு அளிக்கப்படும் விணைப்பயன் .
இறைவன் ஐந்தொழில் செய்வதாக சித்தாந்தம் விவரிக்கிறது.

படைத்தல்,காத்தல்,அழித்தல் ,மறைத்தல்,அருள் செய்தல்- இவையும் நம் விணையை பொறுத்தே அமையும்.

நியதி; அவரவர் வினை  அவரவர்க்கே வரும் என்பதும்.அவர் செய்த பாவ,புண்ணியப் படியே - நற்குடியில்,நற் சார்பில் அவரை பிறக்க செய்வித்து பலன் தரும் என்பதும் நியதி.

மேற்கண்ட நியதி படி நாம் நோக்கின்... இறைவன் நமை நற்குடியில் பிறப்பித்து,நற் சார்பில் வாழ்வித்து நமக்கு நல்  வழியும் கட்டுகிறார் என்பதில் ஐயம் இல்லை.
நாம் செய்த சில தீவிணையின் பயனாய் இன்னல்கள் வந்த போதும்,அவற்றை கடக்க நம் நல்விணை  பயனாய் நல்லதொரு குடுபத்தை அளித்துள்ளான்.இறை வழிபாடு என்னும் ஒப்பற்ற வரத்தை அருளியுள்ளான்.இருளில் தவிக்கையில் ஓர் கீற்று ஒளி தென்பட்டாலும் அதனை கூர்ந்து நோக்கி அதன் வழி சென்று வெளிச்சத்தை அடைவது மனித இயல்பு.அதே போல் நமக்கு கிடைத்த இந்த a s pillai குடும்பத்தையும்,
அதன் வழியே பக்தி மார்கத்தையும், சிக்கென பிடித்தால் சிக்கல்களை களையலாம்.

"தெய்வம் என்றால் அது தெய்வம்,வெறும் சிலை என்றால் அது சிலை தான்".
கவிஞரின் வாக்கு.

நம் நம்பிக்கை தான் வெற்றியை தரும்.நமக்கு நம்பிக்கை வைக்க,அது எல்லாவற்றையும் தீர்க்கும் என்ற உறுதியை தந்து நம்மை இட்டு செல்ல அந்த இறைநம்பிக்கையால் மட்டுமே இயலும்.எனக்கு மேல் இருக்கும் சக்தி என்னை வழிநடத்தும் என்ற உறுதியை இறைவன் மட்டுமே தர இயலும்.
என் இறைவனை நான் சிவமாய் பார்ப்பேன்,உங்கள்  இறைவனை சக்தியாய்,விநாயகனாய் ,முருகனாய் ,பெருமாளாய்,அவரவர் விருப்பபடி வணங்கலாம்.நம் கண் முன் இருக்கும் சிலை வடிவம் எவ்வுருவாய் இருப்பினும் நம் வழிபாட்டு தெய்வமாய் அதை வணங்கலாம்.

அதன்படி மே 4 ஆம் தேதி கட்டப்பட்ட மூத்த கங்கணம் ,எந்த விழாவாக ஆனாலும் முன் நின்று சாரதியாய் அதை வழி நடத்தி செல்லும் எங்கள் மாமாவிற்கு,வயது எழுபதை கடந்த பின்னும் இளமை கூட்டத்தில் தன்னை இணைத்து கொண்டு,அவர்களுக்கும் சவாலாய் முன்னே செல்லும் இந்த சிவனடியார்க்கு ,அவர் விருப்பபடி கட்டப்பட்ட கங்கணம். அவர்களின் மூத்த தலைமுறை என்ற முறைப்படி அவர்களின் சிறிய தந்தையார் கங்கணம் கட்ட முன்னே வந்து யார் கட்ட வேண்டும் உனக்கு என கேள்வி எழுப்ப,அந்த அங்காலேஸ்வரி வந்தாலும் சரி என் அன்னை வந்தாலும் சரி எனக் கூற,எங்கள் முத்துக்குமார் தாத்தாவின் வடிவில் அகிலமெல்லாம் ஈன்றடுத்த அன்னை பராசக்தி வந்து வாழ்த்தி கட்டியது கங்கணம்.

அன்றைய நிலையில் 11 கங்கணங்கள் அம்மை நகரில் முருகன் இல்லத்தில் கட்டப்பட, 
அதே பொழுதில் இன்னும் மூவருக்கு கட்டப்பட்டது கங்கணம் அன்பே சிவம் என்று பெயர் தாங்கி நிற்கும்  அன்னை இல்லத்தில்.சிவனும்,சக்தியும் இணைந்து உலகை செலுத்துவது போல், இவர்களின் அன்பான ஆசியினால் வளர்கிறது சொந்தங்கள்.நம் மூத்த தலைமுறை பொக்கிசங்கள் கருப்பையா தாத்தாவும்,கோமதி அப்பத்தாவும்.

நம் குடும்பத்தின் மூத்த தலைமுறை தம்பதிகள் அம்சமுடன்,அன்புடன் அம்மை அப்பன் வடிவாய் நின்று இந்த காவடி இச்சமயம் எடுப்பிக்க மூலமாய் கரு விதைத்து,அதை கொண்டு செலுத்த துணையும் புரிந்து,முழுதாய் தங்களை ஈடுபடுத்தினர் காவடியில்.

பாட்டனை தாங்கி,கருப்பனையும்  தாங்கி ,நிற்கும் சிவக்குமார் சித்தப்பாவின் வடிவில் தான் நமக்கு முருகா தாத்தா நமக்கு பரிச்சயம்.அவர்களை நேரில் காணாத பெயரன் பேத்திகளுக்கு,முருகா தாத்தா என்ற ஒரு சக்தியை மனதில் பதிய வைத்த பெருமை சிவகுமார் சித்தப்பாவையே சேரும்.அவர்களுக்கு கட்டப்பட்டது கங்கணம் அவர்களின் குடும்ப ஆணி வேறாய் திகழும் அவர்களின் அன்னையின் கரத்தினால்.

அடுத்து பஞ்ச பாண்டவராய் ,அம்மை நகர் வாரிசுகள் காவடி எடுக்க, அதற்கென இந்த நகுல,சகாதேவனாய் பாலாஜியும்,செந்திலும் கங்கணம் கட்டி கொண்டனர்.

மொத்தம் கட்டப்பட்ட கங்கணம் எண்ணிக்கை 14 என்று இருந்தது....ஆனாலும் அனைவருக்கும் மனதில் வருடியது ஒற்றை இலக்கத்தில் ஈன் இல்லை என்று.கங்கணம் கட்டும் போதே மூர்த்தி சித்தப்பா ,அரவிந்த் அத்தானிடம் ,அபினவ் கை காட்டினால் நீயும் எடுக்கிறாய் காவடி என சொல்ல அத்தானிடம் மௌனம்.சில நேரம் நம் மனதின் உள்ளுணர்வு நமக்கு கட்டளை இட்டால் தான் செய்வோம்.அதன் படி முருகன் அவர்களுக்கும் உணர்த்திட்டான்,அத்தானும் உணர்ந்து கட்டி கொண்டனர் கங்கணத்தை இரண்டு நாள் சென்று.

காவடி நினைத்து பார்த்து மனம் நிறைவடையும் ஒரு ஆன்மீக பயணமானது.மீண்டும் பயணிப்போம்...

No comments:

Post a Comment