Showing posts with label காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-8. Show all posts
Showing posts with label காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-8. Show all posts

Wednesday, 2 July 2014

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-8

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-8

                  காவடியை பற்றிய நினைவுகளை எழுதுவதற்கே கூட நேரம் கூடி வர வேண்டியுள்ளது.ஒருமித்த சிந்தையுடன்,எந்த தடைகளும் இன்றி இதனை எழுதவே இத்தனை காலம் பிடிக்கின்றது.நடந்தவற்றை எழுதுவதற்கே இப்படி என்றால்,நடந்த செயல் தடையின்றி நடந்ததற்கு இறைவன் அருள் எவ்வளவு இருக்க வேண்டும்.

                  இறைவன் மிகவும் கருணை வடிவானவன்,நமக்கு உதவுவதே அவரின் தலையாய கடமை.அப்படி இருக்கையில் ஏன் இவ்வளவு பிரச்சனைகள்? நான் என்ன தவறு செய்தேன்? எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு சோதனை? இந்த எண்ணங்கள் நம் யாவருக்கும் தோன்றும்.

                  அதற்கும் சைவ சித்தாந்தம் பதில் கூறுகிறது. உயிர்களாகிய நம்மை உய்விக்க ,முக்தியை தரவே இறைவன் எப்போதும் முயல்கிறான்.நாம் செய்த விணை....நல்விணை,தீவிணை இரண்டும் நம்மை வந்து சேரும்.இந்த விணை பயன் எப்போது வந்து சேரும்....காலம் பார்த்து நம்மை வந்தடையும். மனதால்,செயலால்,சொல்லால் எவ்விதம் நாம் செய்திருந்தாலும்,அவ்விதமே நம்மை வந்து அடையும்.

                  நல்விணை பயன்கள் நமை வந்து அடையும் போது மிகவும் மகிழ்வோம்,தீவிணை பயன் நமை வந்து அடையும் போது துவண்டு விடுவோம். நாம் அனுபவிக்கும் அத்தனைக்கும் அந்த,அந்த  தனி உயிர் மட்டுமே காரணம்.முதலில் இதனை மனதார ஒத்துக்கொள்ளும் மனம் வேண்டும் நம்மிடம்.அப்போதுதான் அதன் பிரயச்சித்தம் செய்ய இயலும்.

                நான் செய்த விணை தான் என்னை வந்து அடையும் எனும் போது,இறைவனையோ, இன்னொருவரையோ குற்றம் சொல்வது எப்படி பொருந்தும்?.இதனை பற்றிய சிந்தனை நமக்கு வேண்டும்.

               அப்போது கடவுளிடம் என்ன வேண்டுவது? எதற்காக வேண்டுவது? எப்படியும் நடப்பது நடந்தேறும் எனும் போது எதற்கு இந்த பக்தி?என்ற கேள்விகள் எழும் நம்முன்னே!
              தவறு செய்பவர்க்கு தண்டனை,தண்டனை காலத்தில் நல்ல நடத்தை என்றால் தண்டனை காலம் குறைப்பு. என மனிதனே சட்டம் வகுத்திருக்கும் போது ,அவனையே ஆட்டுவித்து சகலமும் ஆனவனுக்கு தெரியாதா நமை என்ன செய்வது என்று?
               அதை உணர்த்தவே நம் முன்னோர் நமக்கு காட்டும் பாதை இது.                      
நான் செய்த விணைக்கான பயனை நான் மனதார ஒப்புகொள்கிறேன், அதன் பயனையும் ஏற்றுகொள்கிறேன் ,ஆனால் அதற்கான மன தைரியம் ,வலிமை அத்தனை காலம் காத்திருக்கும்  பொறுமை,நம்பிக்கை இவற்றை எல்லாம் எமக்கு அளித்து எமை வழிநடத்து என்பதுவே!
   
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார்.
              
            நாம் நல்லவற்றை நினைக்க,நல்லவற்றை செய்ய,நல்லவற்றை பேச நமக்கும் எல்லாம் நால்லதாய் அமையும்.இவை அனைத்தும் இந்த காவடி மூலம் நிறைவேறியது.எல்லாருடைய குறைகளும் தீர ஒருமித்து செய்த பக்தி திருவிழா இது.
              
           இதில் ஒவ்வருவரும் தன் நிலை ,பதவி மறந்து சரிசமமாய் இறைவனுக்கு அடிமை பூண்டது, அம்மைநகரில் கல்வி மேலும் சிறக்க பொருளுதவி செய்தது, நம் குடும்பம் அனைத்து ஒற்றுமையாய் அணிதிரண்டது, அன்று ஒரு பெண்ணின் திருமணம் நிகழ சிறு கருவியாய் நாம் இருந்தது,பக்தியின் பயனை நாம் மட்டும் அனுபவித்து மகிழாமல் அம்மைநகர் முழுமைக்கும் பக்தி எனும் மங்கலத்தை பங்கிட்டது என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
             இவை அனைத்தும் நம் நல்விணை பட்டியலில் சேரும் போது இறைவன் நம் கணக்கை தவறாமல் சரி செய்வார்.
           
             களப்பிரர் காலம் என்பது நம் தமிழக வரலாற்றில் உண்டு அதனை,மாற்றி தழைக்க செய்தது நாயன்மார்களின் பக்தி.அதே போல் நம் இல்லங்களில் உள்ள இருளை களைந்து ஒளிமயமான வாழ்வு தரும் காவடி.வெப்பம் தாளாமல் ,பயிர் பச்சை முதல் மனிதன் வரை வாடி வறண்டு தவிக்கையில் தவறாமல் வருணனை அனுப்பி குறை தீர்த்திடுவார்  அப்பன்.அதே போல் நமை காக்க வந்தது  கந்தன் காவடி .

             சென்ற பதிவில் ஐவரின்  காப்பு கட்டியதை பார்த்தோம் ,அதன் வழியில் அடுத்து வருவது அம்மைநகர் முருகன் இல்லம் கண்ட அடுத்த தலைமுறை மூத்த வாரிசு பாசமிகு அண்ணன் மருது  பாண்டியனுக்கு.
            
பழனியாத்திரை, பாதயாத்திரையாக தொடங்கும் போது அண்ணன் தம்பிகளில் தனி ஒருவராய் இந்த அத்தான்களிடம் அகப்பட்டு ,அத்தனைக்கும் ஈடுகொடுத்து,பழனியில் மண்டபம் அமர்த்துவதில் தொடங்கி சாப்பாட்டு ஏற்பாடுவரை சளைக்காமல் செய்யும் இந்த தர்மருக்கு,இந்த முறை பாண்டவர் ஐவராய் காவடி எடுப்பதில் மகிழ்ச்சி.
                  இந்த வருட பிறந்தநாள் எங்கள் அண்ணனுக்கு சிறந்த நாளாய் அமைந்தது காப்பு கட்டப்பட்டு தொடங்கியதால்.இத்தனை வருடம் எத்தனை சோதனை வந்த போதும்,சுப்பன் குடும்பம் கொண்ட நம்பிக்கை மாறாமல் ஆறுமுக அப்பனை எப்போதும் நம்பும் மூத்த வாரிசுக்கு,வாரிசு தருவேன் என்று கீழ சேவல் பட்டியில் வாக்கு தந்த சக்திமைந்தன் அதை சாத்தியமாக்க தந்த கங்கணம் அது.
 மீண்டும் அடுத்த பதிவில்.