காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-5
காவடியை பற்றி எழுதும் இந்த முயற்சியை ஆதரித்து பாராட்டிய உள்ளங்களுக்கு நன்றி. நமக்கு பிடித்த ஒரு நிகழ்வை அடிக்கடி பேசி மகிழ்வது மிகுந்த மகிழ்வை தரும்,நாம் உணர்ந்ததை அடுத்தவர் பரிமாறும் போது சொல்ல வந்த எண்ணமும் முழு அளவில் சென்றடையும்.இங்கும் நம் அனைவரையும் ஒன்றிணைத்த மந்திரச்சொல் "காவடி".
மீண்டும் காவடி உருவான தினத்தை சற்று திரும்பிப் பார்ப்போம்
காவடி அலங்காரம் செய்ய என அமர்ந்த தினம்,மதியம் இரண்டு மணி வரை செய்து முடிக்கப்பட்டது இரண்டு மட்டுமே! அதனை பார்த்த முத்துகுமார் தாத்தா கூட காவடி நாள் வரை இதனை தொடர்வீர்களா என ஐயம் எழுப்பினார்கள். ஆனால் இதிலும் கந்தன் கருணை இருந்தது, அன்றைய தினம் உறங்கச் செல்லும் முன் நாங்கள் முடித்திருந்தது ஏழு காவடி. அதிலும் எதனிலும் எந்த சமரசமும் இன்றி எண்ணத்தில் இருந்து கந்தன் உரைத்த வண்ணம் உருவானது. அடுத்த நாள் வண்ணம் தீட்ட பெரியத்தானும் உடன் சேர அன்றே முடிந்தது அத்தனை காவடி அலங்காரமும் முதற்கட்டமாய்.
காவடி அலங்காரம் செய்ய என அமர்ந்த தினம்,மதியம் இரண்டு மணி வரை செய்து முடிக்கப்பட்டது இரண்டு மட்டுமே! அதனை பார்த்த முத்துகுமார் தாத்தா கூட காவடி நாள் வரை இதனை தொடர்வீர்களா என ஐயம் எழுப்பினார்கள். ஆனால் இதிலும் கந்தன் கருணை இருந்தது, அன்றைய தினம் உறங்கச் செல்லும் முன் நாங்கள் முடித்திருந்தது ஏழு காவடி. அதிலும் எதனிலும் எந்த சமரசமும் இன்றி எண்ணத்தில் இருந்து கந்தன் உரைத்த வண்ணம் உருவானது. அடுத்த நாள் வண்ணம் தீட்ட பெரியத்தானும் உடன் சேர அன்றே முடிந்தது அத்தனை காவடி அலங்காரமும் முதற்கட்டமாய்.
ஏன் முதற்கட்டம் எனில் காவடி சுமக்கும் அன்றைய தினம் காலை வரை தொடர்ந்தது மெருகூட்டும் வேலை.
அடுத்தநாள் ரேவதி அத்தாச்சி மயில்பீலியும் ,சாமி பட ஸ்டிகர்களுமாக வந்திணைதார்கள்.இதில் மஞ்சளும் என்னையும் சேர்த்த குளியல் கொண்டிருந்த காவடிகளின் உட்புறம் அவரவர் இஷ்ட தெய்வம் வந்து குடியேறியது அடுத்த அற்புதம்.
முருகா தாத்தா முருகனை வழிப்பட்டது போல் சீரடி பாபா மேலும் மிகந்த பக்தி கொண்டிருந்தார்கள் என்றும் முன்பே ஜெயலக்ஷ்மி அம்மாச்சி சொல்லியிருக்கிறார்கள். மதுரையில் தாத்தா வசிக்கும் போது மீனாட்சி அம்மன் கோவில் அருகில் கதம்ப பூக்கள் நிறைந்த மனம் வாய்ந்த பூ பந்து வாங்கி வருவார்கள் என்றும் அதை தான் சாமி படங்களுக்கு மாலையாக போடுவேன் என்றும், அந்த கதம்பம் அத்தனை சிறப்பாக இருக்கும் என்றும் அம்மாச்சி தன் சிறுவயதை பற்றி பகிர்ந்திருக்கிறார்கள்.
அதனால் முருகா தாத்தாவின் அருட்பார்வையில் உருவான காவடி என்பதால் சீரடி பாபாவின் ஆளுகையும் நம் காவடியில் நிறைந்திருந்தது.
பாபாவை தம் இஷ்ட தெய்வமாய் கொண்டவர்க்கு அவர் தம் காவடியில் வந்து அருளினார் சீரடி பாபா.
பாபாவை தம் இஷ்ட தெய்வமாய் கொண்டவர்க்கு அவர் தம் காவடியில் வந்து அருளினார் சீரடி பாபா.
ஒவ்வருவர் காவடியிலும் அவரவர் வீட்டு பூஜை அறையில் அதிகம் ஆட்சி செய்யும் கடவுளர் வந்து அமர்ந்ததும் அதிசயமே!
அதுவும் ராஜேஷுக்கு சமயபுரம் மாரியம்மன் குலதெய்வம் அதே அம்மன் படமும் இருந்தது. மாமா தனக்கு யோகநிலை சிவனும் அம்மனும் வேண்டும் என காவடி பொருள் வாங்க கிளம்பும் முன்னே சொன்னார்கள்.
அதே போல் அமைந்தது ஸ்டிக்கர் வடிவில்.நினைத்தவர்க்கு நினைத்த படியும்,அதனை அறியாதவர்க்கு அவர் தம் மனதிற்கு உகந்தபடியும் அமைந்தது ,தெய்வங்களின் அம்சம் பொருந்திய வடிவங்கள்.
சந்தன மாலை
அதன் பின் சந்தனபிரியனுக்கு அவன் தன் காவடியில் மணக்க சந்தனமாலை வேண்டாமோ....அதுவும் அமைந்தது,சண்முகக் கடவுள் போற்றி என்று அப்பனவன் நாமத்தை எக்கணமும் உரைத்து,அவன் சக்திவடிவேலனாகவும் ,சங்கரி மைந்தனாகவும் வந்து நம் குலம் தழைக்க வழிகாட்டுவான் எனவும் உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் எனவும் சிக்கென சிங்கார வடிவேலவனின் திருப்பாதம் பற்றிய மூர்த்தி சித்தப்பாவின் கைகளினால்.
காவடியின் மேல் துணியில் அதிகம் அலங்காரம் வேண்டாம் என நினைத்து அடையாளம் காண உதவும் வகையில் எளிமையாய் இருக்க வேண்டும் என மாலைகளில் வரும் பூக்களை பெரியவர்கள் சுமக்கும் காவடியில் வைக்க, மெல்ல மெல்ல சிறியவர்களின் காவடிகள் ரேவா அத்தாச்சியின் கைகளினால் தன்னை சிறிது பளபளப்பாய் அலங்கரித்து கொண்டன.
மயில் பீலி
பாட்டன் வைத்த பெயர் எங்கள் அத்தைமார்களுக்கு தங்கமயில், செல்லமயில் ,சொர்னமயில் என்று அதனால் தானோ மயில் பீலி ஒயிலாய் வந்தது முதலில் குறுச்சியில் இருந்தும்,பசலையில் இருந்தும். அதன் பின்னே வந்து இணைந்தது அண்ணாமலையில் இருந்து ....அப்பன் அவன் தன் மகனுக்கு சுமக்கும் காவடிக்கு மெருகூட்ட என நட்சத்திரமாய் மின்னும் இந்த அருணாச்சலம் தன் அன்புமகளின் மூலம் அனுப்பிவைத்தான்.
பாசமுடன் வளரும் பிள்ளை போலே, பக்தியுடன்,பக்குவமாய் படிப்படியாய் மெருகேறியது காவடி.இன்னும் அருள் சேரும் இந்த காவடியில் வரும் பதிவில்.