காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-7
கொடுமுடி தீர்த்த காவடி முருகன் இல்லம் வந்து அமர்ந்த விதம் குறித்து சென்ற பதிவில் பார்த்தோம்.இந்தபதிவில் நாம் எடுத்த இந்த காவடி திருவிழாவில் நம் காவல் தெய்வங்களும்,குல தெய்வங்களும்,வீட்டு தெய்வங்களும் நமக்கு தக்க துணையாய் இருந்து நம்மை வழி நடத்தி சென்ற அற்புதத்தை காண்போம்.
காவடி எடுக்கும் இந்த பக்தி திருவிழா கங்கணம் கட்டும் சடங்குடனே தான் ஆரம்பம்.விரலி மஞ்சளை மஞ்சள் துணியில் வைத்து ,நம் நாடி துடிப்பை உணரும் இடமான மணிக்கட்டில் கட்டுகிறோம்.அந்த கங்கனமானது அன்று முதலே தன் ஆளுகைக்குள்,அதன் காப்பு வட்டத்துக்குள் நம் குடும்பத்தை அழைத்துக் கொண்டது.நம் துடிப்போடு இணைந்து காவடி என்னும் மந்திர சொல்லையும் ,அதன் மீது கொண்ட பக்தியையும் ,நமக்கு பழனிமலை தண்டாயுதபாணி தெய்வத்திடம் இருக்கும் அசைக்க இயலா நம்பிக்கையயும் சுவாசமாக கொண்டு விட்டது.
கங்கணம் கட்டும் நிகழ்வு மே 4 தேதி,அம்மை நகரில் இருக்கும் தெய்வங்களை வணங்கி,தோட்டத்தில் குடி கொண்டு இருக்கும் நம் பாட்டனையும் வணங்கி முறை படி வயதில் சிறுவன் என ஸ்ரீராமனிடம் தொடக்கி மூத்த தலைமுறை என அவன் தாத்தா பெரிய ராமரிடம் முடிந்தது,
கங்கணம் கட்டும் இந்த நிகழ்வு நடந்தேற நமக்கு இரண்டுமணி நேரங்கள் ஆனது.அந்த நேரம் அனுபவித்த மெய்சிலிர்க்கும் அனுபவம் இப்போதும் அதே உணர்வை தருகிறது.
மூர்த்தி சித்தப்பா ஸ்ரீராமனிடம் 'காவடி எடுக்கும் இந்த பக்தி திருவிழாவுக்கு கங்கணம் கட்ட பெற்றவரிடமும்,பெரியவர்களிடமும் அனுமதியும்,ஆசியும் பெறச் சொல்ல',எங்கள் வீட்டு பசலை வாரிசு எங்கள் அனைவரிடமும் அதே வார்த்தைகளால் ஆசி வேண்ட அங்கிருந்த அவன் பாட்டன்மார்,
அப்பத்தாமார்,தந்தையர்,தாயார்கள் என எங்கள் அனைவருக்கும் இருந்த உணர்வு நிலை சொல்லில் அடங்காது. நம் குடும்பம் வழி வந்த பக்தி மார்க்கம் நம்முடன் முடியாது,அது வாழையடி வாழையாய் தொடந்து வர அடுத்த தலைமுறை வந்த மகிழ்வு அது.
அடுத்து ராஜேஷுக்கு கட்டப்பட்ட கங்கணம்....எத்தனை சோதனை வந்தபோதும்,அதை கடக்க கந்தன் அருள் உண்டு,எடுத்த செயல் அத்தனைக்கும் உற்ற துணையாய் எங்கள் அன்னையர் இருவர் உண்டு,என்ற நம்பிக்கை பலம் கொண்ட கங்கணம்.
ரஞ்சித் அண்ணனுக்கு கட்டப்பட்ட கங்கணம்....பக்தியின் பெயரால் ஒன்றிணைந்த இந்த சுப்பன் கூட்டத்தில் சொந்தம் என்றிருந்தால் மட்டுமே சேரமுடியும் என்பதில்லை,முருகன் அடிமை என்ற பந்தம் ஒன்றே போதும் என அனைவருக்கும் உணர வைத்த கங்கணம்.
கோபி அண்ணனுக்கு ....ராமர்,சீதையாய் அவர் அண்ணன் அண்ணி துணையிருக்க தம்பி லட்சுமனனாய் என்றும் உடனிருந்து வாழ்வில் உயர்ந்து சகல செல்வங்களும் பெற்று உயர்ந்து வாழ அந்த ஆறுமுகக் கடவுளிடம் வேண்டி கட்டப் பட்ட கங்கணம்.
சக்தி வழி வந்த அந்த மங்கைக்கு கட்டப்பட்ட மங்கள கங்கணம்.ரேவதி அத்தாச்சி மேல் வந்து நம் பாட்டன் கேட்ட வாக்கு...இளைய தலைமுறை ஒன்றிணைந்து இனி வரும் காலம் எல்லாம் நம் குடும்பம் வழிநடத்தப்பட வேண்டும் என்பதே.
கூடு விட்டு பிரிந்து இரை தேடி செல்லும் பறவைகள் போல் நாம் திசை எட்டும் பறந்து இறைந்து கிடக்கின்றோம்.அது காலத்தின் கட்டாயம்.நம் வசிப்பிடத்தின் தொலைவு வேண்டுமானால் அதிகம் இருக்கட்டும்.ஆனால் நாம் மனதளவில் அருகில் இருப்போம்.
கூடு விட்டு பிரிந்து இரை தேடி செல்லும் பறவைகள் போல் நாம் திசை எட்டும் பறந்து இறைந்து கிடக்கின்றோம்.அது காலத்தின் கட்டாயம்.நம் வசிப்பிடத்தின் தொலைவு வேண்டுமானால் அதிகம் இருக்கட்டும்.ஆனால் நாம் மனதளவில் அருகில் இருப்போம்.
முருகனுக்கு எடுபிக்கும் திருவிழா....பாதயாத்திரையா ,அன்னதானமா ,காவடியா எதுவாக இருப்பினும் அதில் முழுமையாய் தன்னை புகுத்தி,
சிந்தையில் எப்போதும் பக்தியை சிரத்தையாய் ஏந்தி நிற்கும் தும்பிக்கை நாயகனின் பக்தனுக்கு எங்கள் பாசமிகு ராஜா மாமாவிற்கு அவர்களின் தொழில் சிறக்க எங்கள் அனைவராலும் வேண்டப்பட்டு கட்டப் பட்ட வெற்றி கங்கணம்.