காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-3
காவடி என்ற பக்தி மிக்க நிகழ்வில் இன்னும் எத்தனை நாள் வேண்டுமானாலும் அமிழ்ந்து இருக்கலாம் அதனால் ஆனந்தமே.நான் இங்கே மிக முக்கியமாய் வலியுறுத்த நினைப்பது ,நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்த பக்திக்கு வலிமை அதிகம். நாம் ஒன்றுகூடி அந்த ஷண்முக கடவுளிடம் கோரிக்கை ,அதுவும் 100% நம்பிக்கையுடன் வைக்கும் பொழுது அவன் நம்மை கைவிட மாட்டன் இது உறுதி.அதன் அச்சாரம் தான் காவடியில் நடந்த ஒவ்வரு செயலும்.
காவடி அமைந்த விதம் முன் பதிவில் பகிர்ந்தேன்.நாங்கள் மனதில் நினைத்ததை புரிந்து, காவித்துணியாகவும்,அச்சுப் படமாகவும் ,அலங்கார லேசாகவும் இருந்ததை தனித்தன்மை வாய்ந்த காவடியாக மாற்றி தந்த பெருமை ,அம்மைநகர் டைலர் அண்ணன் ஆரோன் அவர்களை சாரும்.சித்தப்பா சொல்லுக்காக,அவர் தன் அலுவல்களை விடுத்து காவடிக்கு முக்கியத்துவம் தந்து ,மிகுந்த ஆர்வத்துடன் நேரம் காலம் பார்க்காது தைத்து தந்தார்.
அடுத்து காவடி அலங்காரம்.... சிறிய பெரிய பாசிகள்,மணி,உல்லன் நூல்,சாட்டின் ரிப்பன் ,வண்ணங்கள் என்று எந்த யோசனையும் இல்லாமல் கைக்கு எடுக்க தோன்றிய பொருட்களை கொண்டு வந்தோம்.அவை யாவும் செவ்வனே தோரணங்களாய் உரு பெற்று காவடியை அலங்கரிக்கும் பாக்கியத்தை பெற்றுக்கொண்டன.
1.சிறு பாசிகள் ,பெரிய பாசிகள் கொண்ட ஒரே போன்ற தோற்றம் தோரணங்கள் 8 அமைந்தது வயதில் சிறியவர்க்கு.
2.உள்ளன் நூல் கொண்டு குஞ்சம் அமைந்து மணிகள் கோர்க்கப்பட்ட காவடிகள் -3. பெரியவர்க்கு.[இதில் சிவகுமார் சித்தப்பா,மாமா,மற்றும் பஞ்ச பாண்டவரில் தருமருக்கு]
3.சாட்டின் ரிப்பன் கொண்டு வடிவமைக்கப்பட்ட காவடி 2.[சமகால மாமன் ,மச்சினன் என்பதால் சித்தப்பா மற்றும் பெரியத்தானுக்கு]
4.நாங்கள் வாங்கிய மணிகள் பத்தாதோ என ஐயம் தோன்ற ராஜா மாமா அன்று மாலை சில ரெடி மேட் தொங்கட்டான் வங்கி வந்தார்கள்.எப்போதும் பிள்ளையாருக்கு ஒரு வழக்கம் ,ராஜா மாமாவிடம் இருந்து தனிச் சலுகையாய் சில வற்றை பெற்று கொள்வார் ,அதில் இருவருக்கும் தனி மகிழ்ச்சி. இங்கும் அப்படித்தான் நாங்கள் வைத்திருந்த பொருட்களில் இல்லாமல் தனியாய் தனெக்கென அவருடைய செல்லப் பிள்ளையிடம் பெற்றுக்கொண்டார் பிள்ளையார்.
5.அழகர் காவடி என்று நாமகரணம் கொண்டதனால் அரவிந்தத்தானின் காவடியும் சிறப்பாய் தன்னை அலங்கரித்து கொண்டது. அழகர் காவடி மணிகளால் [பெல்] நிறைய வேண்டும் என முதலிலேயே வெண்ணிலா சித்தி ,எங்களிடம் சொன்னார்கள்.
அதன்படி நாங்கள் வாங்கி வைத்திருந்த அலங்கார மணிகள் கொண்ட பாக்கெட்டில் 100 மணி இருந்தது.ஒவ்வரு காவடிக்கும் 6 மணி என பக்கிட்டு மிச்சம் இருக்கும் மணிகள் 16 மணிகளை இதில் சேர்க்கலாம் என முடிவு செய்தோம்.அதனால் கடைசியாய் இந்த காவடியை தொடங்க 28 மணிகள் மிச்சம் இருந்தது. நமக்கு கணக்கில் பிழை என்று எண்ணி 24 மணிகளை கொண்டு முழுதும் மணிகளால் நிறைந்த ஓசை காவடியாய் அதை அமைத்தோம்.அதன் பின் அறியவந்தது முன் செய்து முடித்த இரண்டு காவடிகளில் இந்த அலங்கார மணி பொருத்தப்பட வில்லை என்பது. அலங்கார பிரியரான அந்த பெருமாள் என்றுமே ஒரு விளையாட்டை செய்து தான் முருகனுக்கே மாமன் என்பதை நிரூபிப்பார்.
நீ எதை வேண்டுமானாலும் செய் அதில் ஒரு கணக்கு வந்துவிடும் என்று சித்தப்பா ஒவ்வொரு முறையும் சொல்வார்கள்.ஆம் அவன் போடும் கணக்கு முன்னே நாம் எம்மாத்திரம்.இதையெல்லாம் பார்த்த பொழுது தோன்றிய வார்த்தைதான்...செய்த கரங்கள் எங்களது சிந்தை கந்தனது
No comments:
Post a Comment