Wednesday, 25 June 2014

காவடி சில நினைவுகளும்,பகிர்வுகளும்-1

ஓம் சரவணபவ 

             எல்லாம் வல்ல முருகபெருமான் அருளால் A.S.Pillai family என்ற நம் குடும்பம் செய்த மாபெரும் பக்தி திருவிழா 2014 ஆண்டு மே மாதம் 25,26 தேதிகளில் நாம் எடுத்து பழனிமலை தண்டாயுதபாணி தெய்வத்துக்கு செலுத்திய காவடி.

             இந்த நிகழ்வை என்றும் நம் மனதில் பதித்து பத்திரப்படுத்தி வைத்திருப்போம் அது உறுதி.அதற்க்கு உறுதுணை செய்யவும் இந்த நிகழ்வை ஆவணப்படுத்தவும் ,நான் எடுக்கும் சிறு முயற்சி இந்த blog .

          இதில் நம் நினைவுகளை பதித்து வைப்போம்.வேண்டும் பொது திருப்பி புரட்டி மகிழலாம்.என்னோடு இணைய எம் குடும்பத்திற்கு அழைப்பு விடுக்கிறேன்.


காவடி சில நினைவுகளும்,பகிர்வுகளும்-1
               காவடி இந்த மூன்று எழுத்து நம்மை ,நம் சிந்தையை முற்றிலும் தன் வசப்படுத்தி வைத்திருக்கிறது. நாம் அனைவரும் அதன் நினைவுகளில் சஞ்சாரித்துகொண்டேதான் இருக்கிறோம்.
                காவடி எடுப்போம் என்பது மார்கழியில் பாதயாத்திரை சமயத்தில் கருவாக தோன்றி ,பல தடைகள் வந்த போதும் அவற்றை வெற்றிகரமாய் தகர்த்து ,நமக்கு மனதில் சந்தோசம்,நெகிழ்ச்சி,நம்பிக்கை,உறுதி,ஒற்றுமை இன்னும் வார்த்தைகளில் வடிக்க இயலாத பல உணர்வுகளை நமக்கு கொடுத்து இனிதாக நிறைவடைந்துள்ளது.
                     ஒரு செயல் தொடங்கியபின் ,கிரீஸ் இட்ட இயந்திரம் போல் வழுக்கிக்கொண்டு அதன் பாதையில் செவ்வனே செல்லும் போதே அதன் உத்தேசியமும் முழுதாய் நிறைவேறும், இதில் எவ்வித ஐயமும் வேண்டியதில்லை.அதன்படி இந்த காவடி கங்கணம் கட்டப்பட்ட நாள் முதல் ,அவன் அருளாலே அவன் நினைத்தபடி முடிந்தது.
            இதில் நான் உணர்ந்த சிறு பகுதியை இங்கே பகிர்கிறேன்.சில விஷயங்கள் பகிரப்படும் போது இந்த காவடியின் முழு அடையாளமும் தெரியவரும்.என்னால் முடிந்தவரை சில நிகழ்வுகளை பதிவுசெய்கிறேன்.
           
              காவடி அலங்காரம் செய்ய என அதன் சம்மந்தப்பட்ட பொருள் சேகரிக்க சித்தப்பாவுடன் தேவியும்,நானும் புறப்பட்டோம்.முதலில் பால் சுமக்கும் செம்பு வாங்க என...மீனாட்சி அம்மன் கோவில் புற வீதிகளில் அலைய நாம் நினைத்த அளவில் ,எண்ணிக்கையில் செம்புகள் கிடைக்கவில்லை. புதுமண்டபத்தில் உறவினர் கடை இருப்பது நினைவில் வர....தேவி நேராக சென்று நின்ற இடம்..."கதிர்வேல் பிள்ளை பாத்திரக்கடை" அங்கு நாங்க கேட்டது கேட்டபடி அரைமணியில் தருவதாய் சொன்னார்கள்.அங்கேயே காவடியில் கட்ட மணியும்,கச்சையில் கோர்க்க சலங்கையும் வாங்கினோம்.
               
         அடுத்து காவடியில் வைக்க சாமிப்படம் வேண்டும் என மண்டபத்தை சுற்றும் போது கண்ணில் பட்டது சாமி ஊர்வலம் வரும் போது முன்னே வரும் குடையும்,அதில் இருந்த படங்களும்.அந்த துணியில் அச்சடிக்கப்பட்ட முருகன் படங்களை கேட்க....முதல் முறையாக நமக்கு அந்த படங்களை தனியாக விற்பனை செய்தார் அந்த கடைகார்.
               
               ஒருபுறம் முருகன் படம் என முடிவு செய்து....அங்கிருந்த மற்ற படங்களை பார்த்தபோது....பிள்ளையார்,மயில்,சேவல்,அம்மன்,சிவலிங்கம்,நந்தி,நாமம்,சூலம் என வரிசையாய்...எடுத்து வைத்தோம்..அதன் பின் கருப்பணசாமி படம் கிடைத்தது. நாங்கள் முத்தையா படம் வேண்டும் என கேட்க ,சித்தப்பா சிரித்தார்கள்...கடைகாரர் முத்தையா படம் இல்லை எனவும் ,நாங்கள் கருப்பனை பச்சை வஸ்திரமிட்டு முத்தையாவாக மாற்றுவதாய் சொன்னோம்.அதன் பின் மதுரை வீரனும் எளிதில் கிடைத்தார்.
                    
                அடுத்து கச்சை....எடுக்க அடுத்த கடை நாட.. அதற்குள் அண்ணன் தம்பி வந்து இணைந்தனர்.கச்சை பொதுவாக கருப்பும் ,சிவப்பும் தான் உண்டு.கருப்பனுக்கு கருப்பு என எட்டு கச்சை தயார்.ஆனால் மாவடியானுக்கு பச்சை கச்சை தான் வேண்டும் என ராஜா மாமா அடம்பிடிக்க ,அந்த கலரில் கச்சையே இல்லை என கடைகாரர் சத்தியம் செய்தார்.பின்னர் பலத்த யோசனைக்கு பின்னே சிகப்பு கச்சையின் நடுவே பச்சை ஜரிகை வைத்து மாவடியான் கச்சை தயாரித்தோம்.
அடுத்த பதிவில்.....கவை உருவானவிதம் வளரும்.




No comments:

Post a Comment